Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குழந்தைகளையும் தன்னையும் தவிக்க விட்டாரே…. மனைவி தற்கொலை…. அனாதைகளான குழந்தைகள்…

கணவனை இழந்த துயரம் தான் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் சிவிலியாங்குளத்தை சேர்ந்தவர் செல்வராணி சில மாதங்களுக்கு முன்னர் செல்வராணியின் கணவர் சங்கர் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வயலுக்கு சென்ற பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கணவனின் பிரிவினால் குழந்தைகளையும் தன்னையும் தனியே தவிக்க விட்டு இறந்து விட்டாரே என செல்வராணி மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்து செல்வராணி விரக்தியடைந்த மனதோடு விஷத்தை குடித்து மயங்கி விட்டார்.

அவர்களது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் செல்வராணியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் செல்வராணி. இதனையடுத்து செல்வராணியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |