Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியா?…. எய்ம்ஸ் நிறுவனம் எதிர்ப்பு…. காரணம் என்ன தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயது வரையில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்றும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என்றும், பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்த நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட எடுத்த முடிவு அறிவியல் பூர்வமற்றது என எய்ம்ஸ் நிபுணர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் கூடுதலாக எந்த பயனும் கிடைக்காது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் துறையின் மூத்த நிபுணரான மருத்துவர் சஞ்சய் ராய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.

Categories

Tech |