தமிழகத்தில் குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் பரவுவதாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரையில் இருக்கின்ற கொரோனா மருத்துவமனையில் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ” கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருக்கின்ற குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக வதந்திகள் பரவி கொண்டிருக்கின்றன. அதை எவரும் நம்ப வேண்டாம்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வெளிவரும் வரையில் பொது மக்கள் முக கவசங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.