தீயில் தவறி விழுந்து முதியவர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரியாம் பாளையம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் குளிர் காய்வதற்காக காய்ந்த சருகுகளை குவித்து வைத்து தீ மூட்டியுள்ளார். இந்நிலையில் குளிர் காய்ந்து கொண்டிருந்த முதியவர் திடீரென நிலைதடுமாறி தீயில் விழுந்து உடல் கருகி இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.