திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெறியம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான ரங்கசாமி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் குடகனாறு தடுப்பணை பகுதிக்கு சென்று தனியாக குளித்து கொண்டிருந்த 22 வயதுடைய இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ரங்கசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு பிரிந்து சென்று காயமடைந்த ரங்கசாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் ரங்கசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.