தந்தையின் கண்ணெதிரே சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பசுபதி புத்தூர் பகுதியில் நேபாள நாட்டைச் சேர்ந்த தேவேந்திர சிவதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அங்கு உள்ள தனியார் பிராயிலர்கோழி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தேவேந்திரன் சிவதர்ஷன் தனது மகனான அமீர் என்ற சிறுவனுடன் ஆற்றில் குளிப்பதற்குகாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அமீர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கிவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிவதர்சன் தனது மகனை காப்பாற்ற முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் . இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் சிறுவனின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அமீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.