மதுரையில் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சக்குடியில் வினோத் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் அவர் பக்கத்து ஊரிலிருக்கும் கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர் கிணற்றில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருக்கும் போது சற்றும் எதிர்பார்க்காமல் நீரில் மூழ்கி கவலைக்கிடமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.