Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற சிறுவன்…. தண்ணீரில் மூழ்கி பலி…. கதறும் பெற்றோர்….!!

குளத்திற்கு குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி என்னும் பகுதியை சேர்ந்தவர் பால செந்தில் அவரது மகன் சந்தோஷ் கறம்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெத்தேரி குளத்தில் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் குளிக்க சென்றனர். அந்த குளத்தில் ஆங்காங்கே வண்டல்மண் எடுப்பதற்காக குழி தோண்டி வைத்திருந்தனர் .  இதனை அறியாத சந்தோஷ் அப்பகுதியில் சென்று குழிக்குள் மூழ்கினான்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சந்தோஷை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |