தைவானில் திடிரென நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று காலை 12.43 மணியளவில் உணரப்பட்டது. மேலும் இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகயுள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்து வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.