காவல் நிலையங்களை குறிவைத்து அல் ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
சோமாலியா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் இன்னும் 10 நாட்களில் நடைபெற இருக்கிறது. இதனால் காவல் நிலையங்களை குறிவைத்து அல் ஷபாப் பயங்கரவாதிகள் அடிகடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் நள்ளிரவு ஒரு மணிக்கு தலைநகர் மொகதிசுவின் ஐந்து வெவ்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஏராளமான ராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை அவர்கள் கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.