ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி வருகிறார்.
கமுளி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி மற்றும் 59 வது குருபூஜை விழா கடந்த 28ஆம் தேதி ஆன்மிக விழாவோடு தொடங்கியது. இதை அடுத்து கடந்த 30ஆம் தேதி அரசு விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
அன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி செலுத்தாதது பேசும்பொருளாக கருதப்பட்டது. இந்நிலையில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மாலையணுவித்து அஞ்சலி செலுத்தினார். இவருடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் உடன் வருகை புரிந்திருந்தனர்.