Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை நோய் தொற்று…. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு…. WHO எச்சரிக்கை….!!

தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

குரங்கு அம்மை நோய் தொற்று தற்போது  55 நாடுகளில் பரவியுள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாட்டிலிருந்து கேரளா நாட்டிற்கு வந்த  35 வயதுடைய  ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபரை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் என அவருடன் நெருங்கிய  தொடர்பிலிருந்த 11 பேரிடம் நோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள குரங்கு அம்மை நோயால் தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பகுதிக்கான இயக்குநர் பூனம் சிங்  கூறியதாவது, “இந்த குரங்கு  அம்மை நோய் தொற்று பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.  குரங்கு அம்மை நோய் பாதிப்பு திறனை மதிப்பீடு செய்வதற்கும், நோய் பாதிப்பு தடுப்பு திறனை வலுப்படுத்துவதற்கும் இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு அளித்து வருவதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |