Categories
மாநில செய்திகள்

குயின்ஸ்லேண்ட்டை 4 வாரங்களில் அப்புறப்படுத்த…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் சட்டப்போராட்டம் நடத்தி அவற்றை மீட்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  கூறியுள்ளார். மேலும் கோவில் இடங்களில் காலங்காலமாக குடியிருப்பவர்களுக்கு இனிமேல் பட்டா வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 177 ஏக்கர் நிலம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றும், நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி கோயில் நிலம் என்று உறுதிப்படுத்தி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோவில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தை அப்புறப்படுத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுமதி வழங்கி மேலும் 4 வாரத்திற்குள் அந்த நிறுவனத்தை அப்புறப்படுத்தவும் குத்தகை காலம் முடிந்த பின்னும் நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததால் ரூபாய் 9.5 கோடி வசூலிக்கவும் அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |