Categories
கோவில்கள் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கும்பகோணம் சௌந்தரராஜப்பெருமாள் கோவிலில் திருமங்கை ஆழ்வார் சிலை போலி – அதிர்ச்சி தகவல்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சௌந்தரராஜப்பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை போலியானது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ளது சௌந்தரராஜப்பெருமாள் கோவில். இந்தக்கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை லண்டனில் உள்ள ஆஸ்மோரியன் அருங்காட்சியத்தில் இருப்பதாக இந்திய தூதரகம் மற்றும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் புதுச்சேரில் உள்ள பழைய ஆவணங்களில் உள்ள சிலைக்கும் தற்போதைய ஆவணங்களில் உள்ள சிலைக்கும் பல வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது 1957ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு தற்போது உள்ள சிலையையும் ஒப்பிட்டு பார்க்கும் போது நிறைய வித்தியாசத்தை கண்டறிந்தனர்.

இதன்மூலம் சௌந்தரராஜப்பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை போலியானது என தெரியவந்துள்ளது. 1957ற்கும் 1967ற்கும் இடைப்பட்ட காலங்களில் சிலை மாற்றப்பட்டிருக்கும் என கருதுகின்றனர்.

இந்நிலையில் லண்டனில் உள்ள ஆஸ்மோரியன் அருங்காட்சியத்தில் இருப்பது தான் உண்மையான சிலையாக இருக்கலாம் என சிலைகடத்தல் மீட்பு படையினர் அறிக்கை ஒன்றை அங்கு அனுப்பியுள்ளனர்.

Categories

Tech |