Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குண்டுவெடிப்பு தினம்” பீதியை கிளப்பிய மர்ம சூட்கேஸ்…. கோவையில் பரபரப்பு….!!

குண்டு வெடிப்பு தினமான நேற்று காந்திப்புரத்திலுள்ள மேம்பாலத்திற்கு கீழே இருந்த மர்ம சூட்கேசால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டதில் கடந்த 1998 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று ஆர்.எஸ் புரம் உட்பட பல பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.  அதில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததோடு ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். எனவே ஆண்டுதோறும் குண்டுவெடிப்பு தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.  அவ்வகையில் கோவை கமிஷனர் பிரதீப் குமார், துணை கமிஷனர்,சூப்பிரண்டு தலைமையில் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக டவுன்ஹால், ஆத்துப்பாலம், ஆர்.எஸ் புரம், காந்திபுரம், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக சிறப்பு அதிரடிப்படை, மத்திய அதிவிரைவுபடை போலீசார் வெள்ளலூரில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாத வாறு கூட்டத்தை கலைக்கும் விதமாக கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம் மற்றும் தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனம் ஆகியவை நிறுத்தி வைப்பதோடு சீருடை அணிந்த காவலர்கள் பொதுமக்களுடன் கலந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று   காலை காந்திபுரத்தில் உள்ள மேம்பாலத்திற்கு கீழ் மர்ம கருப்பு நிற சூட்கேஸ் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கிடந்துள்ளது.  அதனை யாரும் வெகு நேரமாக எடுக்காததால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து சோதனை செய்தனர்.  அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கூறியதை அடுத்து போலீசார் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். திறந்து பார்த்தபோது எந்தப் பொருளும் இல்லாமல் காலியாக இருந்தததை கண்டு நிம்மதி அடைந்தனர்.  குண்டு வெடிப்பு தினமான நேற்று காலை காந்திபுரத்தில் காலியாக கிடந்த சூட்கேசால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |