தமிழத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது இரண்டாவது அலை வேகமெடுத்ததால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற வில்லை.
பின்னர் தற்போது கொரோனா சற்று குறைந்துள்ளதால், பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ஆதிரா ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி முதல் இரண்டு நாட்கள் நடக்க உள்ளது. அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும். பணியிட மாறுதல் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.