Categories
மாநில செய்திகள்

குடோனில் பற்றி எரிந்த தீ…. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்?…. வெளியான தகவல்….!!!!

சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் சர்வீஸ்சாலை பகுதியில் மிஸ்டர் கோல்டு எண்ணெய் குடோன் இருக்கிறது. இதன் அருகில் பிளைவுட் குடோன், டைல்ஸ் குடோன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேமித்துவைக்கும் குடோன்கள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9:45 மணியளவில் எண்ணெய் குடோனில் திடீரென்று தீபற்றி எரிந்துள்ளது. இதன்காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலாவதாக பிளைவுட் குடோனில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்து மளமளவென எண்ணெய் கிடங்கு மற்றும் டைல்ஸ் கிடங்குக்கு பரவியது. இதனால் வான் உயர தீ எரிந்ததில் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இங்கு உள்ள குடோன்களில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதை  அடுத்து அவர்கள் அங்கு இருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அத்துடன் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மதுரவாயல், பூந்தமல்லி, விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், கே.கே.நகர், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பல்வேறு தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த 100-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையில் சுமார் 4 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து இருக்க வாய்ப்புள்ளாதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. குடோன் அருகில் எண்ணெயுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டேங்கர் லாரிகளிலும் தீப்பற்றியதால் அதுவும் கொழுந்துவிட்டு எரிந்தது. அருகில் இருந்த பர்னிச்சர், டைல்ஸ் குடோன்களிலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுதும் கரும்புகையானது சூழ்ந்தது. இதன்காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாசப்பிரச்சனை ஏற்பட்டது. இதற்கிடையில் மதுரவாயல், வானகரம், போரூர் பகுதியில் மழை பெய்யத் துவங்கியது. அதிலும் குறிப்பாக தீ விபத்து ஏற்பட்ட வானகரம் பகுதியில் கனமழை பெய்யத் தொடங்கியதால் தீயணைக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |