ரேஷன் கடை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகள் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, செப்டம்பர் மாதம் முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் வருடம் கொரோனா பாதிப்பு தொடங்கிய போது மத்திய அரசிடம் இருந்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு PMGKY திட்டத்தின் கீழ் ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ கோதுமை அரிசி கூடுதலாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2020 ஜூன் வரை இந்த திட்டம் நீட்டிக்க உத்தரவிட்டிருந்தது. அதன் பின் நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு கோதுமை ஒன்றுக்கு இரண்டு ரூபாயும், அரிசிக்கு மூன்று ரூபாயும் ரேஷன் கார்டு தாரர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு ரேஷன் கார்டுதாரர்கள் செப்டம்பர் முதல் ரேஷன் பொருட்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.