இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு தை பொங்கலை சிறப்பாக கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க முதல்வர் முக ஸ்டாலின் ஆணையிட்டார். இந்த தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை, உப்பு ஆகிய பொருள்கள் அடங்கிய துணிப்பை, 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து முழு கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் வீதம் மொத்தம் 71,10,85,980 செலவில் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.