Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குடும்பம் நடத்த வராத மனைவி…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்வயலாமூர் கிராமத்தில் விவசாயியான வேலு(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த புஷ்பா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து குடும்பம் நடத்த வருமாறு வேலு புஷ்பாவை அழைத்துள்ளார்.

அதற்கு புஷ்பா மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த வேலு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |