சென்னையில் கடந்த சில நாட்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அதிகமானோர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .
சென்னை தேனாம்பேட்டை TMS வளாகத்தில் உள்ள கொரரோனோ தடுப்பூசி நிலையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், இனிமேலாவது தடுப்பூசி எடுத்துக்கோங்க .குடும்ப நிகழ்ச்சிகள்ல தள்ளி நிற்பது, மாஸ்க் அணிவது, பேருந்தில் செல்லும் போது மஸ்க் போடுவது, பொது இடங்களில்20க்கும் மேற்பட்டவர்கள் கூடினால் மாஸ்க் போடுங்கள். கவனம் குறைவா மட்டும் இருக்காதீங்க என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.