மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜீவ் நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மணிவண்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிவண்ணனுக்கும் அவரது மனைவி மைதிலி என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த மணிவண்ணன் மைதிலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த மைதிலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.