Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாம்மாள் என்ற மனைவி உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் முருகன் குடும்பத்தினருக்கும் சீதாம்மாளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த முருகன் சீதாம்மாளை தாக்கியுள்ளார். இதுகுறித்து சீதாம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |