தமிழகத்தில் கடந்த வருடம் சட்டமன்ற தேர்தல் அறிக்கையாக திமுக அரசு குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக முதல்வர் பதவியேற்றார். தற்போது மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று சுமார் 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளது.
இவ்வாறு ஆட்சி மாற்றத்திற்கு பின் தமிழகத்திலுள்ள அனைத்து துறைகளிலும் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் இதுவரையிலும் அமலுக்கு வரவில்லை. இதுதொடர்பாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக-பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. தற்போது குடும்பத் தலைவிகளுக்கு எப்போது உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்தநிலையில் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.