Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்…. திடீர் மரணம்…. பெரும் பரபரப்பு….!!!!

புதுக்கோட்டை அருகே உள்ள கைகுறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்த ராணி என்ற பெண், பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ராணி. இந்நிலையில் ராணிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மீண்டும் கருத்தரித்து உள்ளதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராணிக்கு நேற்று காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது திடீரென்று அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சையின் போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ராணியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ராணியில் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராணியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |