வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை வேலூர் மண்டல நகராட்சியின் நிர்வாக இயக்குனர் பி குபேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் பாலசுந்தரம், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சாமுண்டீஸ்வரி, சிவகுமார், தூய்மைப்பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்.
அதனை தொடர்ன்ட்து குடியாத்தம் அம்பாபுரம் அண்ணா தெரு, தினசரி மார்க்கெட், போடி பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு தூய்மையாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது தூய்மை பணியாளர்களிடம் தூய்மை பணியில் ஈடுபடும் போது பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாக அணிந்து பணியாற்ற வேண்டும் என்றும் குடியாத்தம் நகராட்சி யை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். .