Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு…. முன்னேற்பாடு நடவடிக்கைகள்…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்….!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

நாடு முழுவதிலும் வருகின்ற 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழாவை கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார்.

இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா கொண்டாடுவதற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷிப் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |