Categories
தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்….. சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார் மன்மோகன் சிங்…..!!!!

நாடாளுமன்ற வளாகம், சட்டமன்ற வளாகங்களில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதி முடிவடைய உள்ளது. இதனால் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டி போடுகின்றனர்.

இன்று காலை 10 மணி முதல் தொடங்கி வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குப்பதிவு சீட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிற வாக்கு பதிவு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. காலை முதல் விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.

Categories

Tech |