Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடிமகன்கள் ஷாக்…. நாளை மதுக்கடைகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் நாளை கந்த சஷ்டி கவசம் விழா நடைபெற உள்ளது.  வருடம்தோரும் கந்தசஷ்டி விழாவிற்கு திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். அதேபோல தேவர் ஜெயந்தி விழாவும் நாளை நடைபெற உள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான கடைகளும் மதுக் கூடங்களும் நாளை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |