தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள 13 மதுபான கடைகள் செப்டம்பர் 1ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.