Categories
மாநில செய்திகள்

குடிநீர் பாட்டலில் மோசடி…. மாஸ் காட்டிய தமிழன்…. தமிழன்னா சும்மாவா….!!!!

தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு ரயில் நீர் என்ற குடிநீர் பாட்டில் வழங்கப்படுகிறது. அதேபோன்று மும்பையில் இருந்து தமிழகத்தின் நாகர்கோவிலுக்கு வரும் மும்பை எக்ஸ்பிரஸில் தமிழகம் வரை ரயில் நீர் வழங்கும் ரயில்வே உணவக ஊழியர்கள், தமிழக எல்லைக்குள் வந்தபின்னர் ஹெல்த் பிளஸ் என்ற பெயரில் சீல் வைக்கப்படாமல் காலாவதியான, தேதி குறிப்பிடாத குடிநீர் பாட்டிலை விநியோகிப்பது வழக்கமாக செய்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அந்த குடிநீரில் பிளீச்சிங் பவுடர் வாடை வந்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் தரமற்ற நீரை குடிக்க வேண்டாம் என்று சக பயணிகளிடம் அறிவுறுத்தியது மட்டுமல்லாமல் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்துள்ளார். அந்த நீரை குடித்து பார்த்த டிடியாரும் அதில் அடைக்கப்பட்டிருப்பது தரமற்ற குடிநீர் என்பதை ஒத்துக் கொண்டார். சாதாரண வாட்டர் பாட்டில் தரமற்ற குடிநீர் பிடித்து வைத்து ஹெல்த் பிளஸ் என்ற ஸ்டிக்கருடன் தமிழகத்துக்குள் பயணிக்கும் பயணிகளிடம் அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழக பயணிகளிடம் தரமற்ற குடிநீரை அதிக விலைக்கு விற்ற உணவக ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இந்தியில் பேசினார்.

இதையடுத்து தங்கள் விற்ற குடிநீர் பாட்டில்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக உணவக ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து ஒவ்வொரு பயணிகளிடமிருந்தும் தரமற்ற குடிநீர் பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டன. இதனிடையே அந்த உணவகத்தில் சோதனை நடத்திய போது உள்ளே அட்டைப் பெட்டிகளில் ஏறத்தாழ 300 ரயில் நீர் குடிநீர் பாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த கணேஷ் உள்ளிட்ட பயணிகள் ஒப்பந்ததாரர்கள் செய்த தில்லுமுல்லு வேலையை அங்குள்ள அதிகாரிகளுக்கு புரிந்த இந்தியில் பேசி அமல்படுத்தினர்.

இதையடுத்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயிலை விட்டு இறங்கி பயணிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து ரயில்வே காவல்துறையினர் உணவக ஒப்பந்ததாரர் ரயிலை விட்டு இறங்கி விசாரணைக்காக கையோடு கொண்டு சென்றனர். குடிநீர் தேவைப்படுவோருக்கு தரமான ரயில் குடிநீர் பாட்டில் நியாயமான விலைக்கு வழங்கப்பட்டதையடுத்து அங்கிருந்து ரயில் நாகர்கோவில் புறப்பட்டது. தமிழக பகுதிக்குள் தரமற்ற குடிநீரை அதிக விலைக்கு விற்று விட்டு தமிழ் தெரியாது என்று கூறி தப்பிக்க நினைத்த வடமாநில ஒப்பந்த ஊழியர்களுக்கு, தமிழர்களுக்கு இந்தியும் தெரியும் என்று பதிலடி கொடுத்து காவல்துறையில் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பினர் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |