திருத்தணி நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக ரூபாய் 109 கோடியே 68 லட்சம் செலவில் பாலாறு ஆற்றின் திருப்பாற்கடல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நகராட்சியில் குழாய்கள் அமைப்பதற்கு பள்ளங்கள் தோன்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை நகராட்சிக்குட்பட்ட காந்தி ரோடு பகுதியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மாணவ மாணவிகளை ஏற்று வந்த தனியார் பள்ளி பஸ் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட முயற்சி செய்தபோது நகராட்சியில் குழாய்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
இதில் ஒரு பக்கமாக சாய்ந்த பஸ்ஸை டிரைவர் உடனடியாக நிறுத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கியுள்ளனர். அதனால் பஸ்ஸில் இருந்த 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். அதன் பின் மாற்று பஸ் வரவழைக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பத்திரமாக பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். நகராட்சியில் இருந்து வந்த பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய பஸ்சை வெளியில் எடுத்துள்ளனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.