குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கட்டிமேடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழுநீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் பாலு, ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கியுள்ளனர். இதனையடுத்து பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு ஏற்படும் மாணவர்கள் இந்த மாத்திரையை கட்டாயமாக சாப்பிட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.