182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல் தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத், இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – இமாச்சலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகின்றது.
பிற்பகலுக்குள் இரு மாநிலங்களிலும் யார் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற போகிறார் என்பது தெரியவரும். உபி, பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. முலாய் சிங்கம் மறைவால் நடைபெற்ற மொய்பூரி மக்களவைத் தொகுதியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் சுமார் 134 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 41 இடங்களில் முன்னிலை பெற்று 2வது இடத்தில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி பின்னடைவை சந்தித்துள்ளதால், அக்கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.