Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் திடீர் நிலநடுக்கம்… பீதியடைந்த மக்கள்… வீதியில் தஞ்சம்…!!!

குஜராத்தில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் பீதியடைந்து வீதியில் தஞ்சமடைந்தனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள பரூச் என்ற நகரில் இன்று மாலை 3 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் மற்றும் சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

Categories

Tech |