Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த தொழிலாளி…. மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தடுமாறி கீழே விழுந்த தொழிலாளி ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள கீழப்புதூர் பகுதியில் யோகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த 1ஆம் தேதி மோகனூருக்கு காய்கறி வாங்க சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து யோகராஜன் சாதாரண காயம் என நினைத்து வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அடிக்கடி தலைவலி வந்ததால் அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது யோகராஜன் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |