Categories
மாநில செய்திகள்

“கிருஷ்ண பகவானிடம் அனுமதி பெற வேண்டும்”…. அமைச்சர் அதிரடி பேச்சு….!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கும் இரங்கல் தீர்மானம் செய்யப்பட்டது. மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, வைகுந்தத்திற்கு சாலை அமைக்க கிருஷ்ண பகவானிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அமைச்சர் அனுமதி பெற்றாரா என தெரியவில்லை என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார். அப்போது அமைச்சர் சேகர்பாபு அதிகாலையிலேயே வைகுந்தம் செல்லும் வழியை காட்டி கொண்டிருக்கிறார். வைகுந்தமோ, சிவலோகமோ சேகர்பாபு வழிகாட்டுவார் என்று அமைச்சர் எ.வ. வேலு பதில் அளித்துள்ளார்.

Categories

Tech |