கிரீன்லாந்திலுள்ள பனிப்படலத்தின் மிக உயர்ந்த பகுதியில், 71 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக கடந்த வாரம் கனமழை பெய்துள்ளது. 1950க்கு பின்னர், மழைப்பொழிவை பதிவு செய்ய ஆரம்பித்த பிறகு முதல் முறையாக கிரீன்லாந்து பனிமலையின் உச்சியில் ‘ summit camp’ ல் மழை பெய்துள்ளது. மழைமானிகள் நிறுவப்படாத பகுதிகளில் திடீர் என்று மழை பெய்ததால் மழையின் அளவை பதிவு செய்ய முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 10,551 அடியில் மழைப்பொழிவு என்பது பருவநிலை மாற்றத்தின் அறிகுறி என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக தீவு முழுவதும் பரவலான பனி உருகல் ஏற்பட்டுள்ளதாக மூத்த விஞ்ஞானி வோல்ட் மேயர் கூறியுள்ளார்.அதே வேளை பனிக்கட்டிகள் உருகிவரும் வீதம் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.