நெல்லை, திண்டுக்கல், கோவை மற்றும் சேலம் போன்ற நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றது. இந்த வருடம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இந்த போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு நெல்லையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் ராமசாமி பேசும்போது, டிஎன்பிஎல் போட்டிகள் இரண்டு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் நான்கு நகரங்களில் நடைபெறுகின்றது.
நெல்லையில் போட்டிகள் நடத்தப்பட்டால் ஆதரவு அதிகமாக எப்போதும் இருக்கும். இந்த வருடம் கூடுதலாக மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது என்றார். இதனை தொடர்ந்து சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் காந்தி பேசியபோது, தொடர்ந்து 2 முறை அணி வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த முறை கூடுதல் அழுத்தத்துடன் விளையாட இருக்கின்றோம். வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து வெற்றி பெற்றாலும் முதன்முறை விளையாடுவது போன்ற அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி விளையாடுகின்ற டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு முன் வீரர்கள் டிவியில் வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. மேலும் போட்டிகள் நடத்தப்பட்ட பின் பல்வேறு இடங்களில் இருந்து முழு ஆதரவோடு வீரர்கள் விளையாடி வருகிறார்கள். டிஎன்பிஎல் விளையாட்டுக்கு பின்தமிழ் நாடு அணி ஒயிட் பால் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதோடு தொடர்ந்து கோப்பைகளையும் பெற்று வருகின்றது என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கௌசிக் காந்தி கூறியுள்ளார்.