Categories
மாநில செய்திகள்

“கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்வு”….. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் உறுப்பினர்களுக்கு அமர்வு படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சி என மூன்று அடுக்காக ஊராட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. ஊரக வளர்ச்சி துறை இயக்குனரின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு மாதத்தில் ஒரு அமர்வுக்கு பத்து மடங்கு உயர்த்தி வழங்கப்படுகிறது.

2012 ஜூன் 29  கிராம ஊராட்சித்தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு மட்டும் அப்போது அமர்வுப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. இவர்களுக்கு தற்போது 5 மடங்கு மட்டுமே அமர்வுப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது.  மாதத்தில் பல அமர்வு நடந்தாலும் ஒரு அமர்வுக்கு மட்டும் படி மட்டும் படி வழங்கப்படும். இதனை ஒன்றிய பொது நிதியிலிருந்து வழங்க வேண்டுமென்று ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |