Categories
மாநில செய்திகள்

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு…. நள்ளிரவில் கசிந்த வினாத்தாள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மதுரையில் காலியாகவுள்ள 209 கிராம உதவியாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கென சென்ற நவம்பர் 7ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 209 கிராம உதவியாளர் பணிக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு மதுரை மாவட்டத்திற்குட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவு தேர்வு நடைபெற இருந்தது.

விண்ணப்பத்திருந்த பெரும்பாலான பட்டதாரிகள் தேர்வெழுத காத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இத்தேர்விற்காக மதுரை தெற்கு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தேர்வு மையத்தில் இருந்த ஆங்கில திறனறிவுத் தேர்வுக்கான வினாத்தாள்களை சிலர் சமூகவலைதளங்கள் வாயிலாக அனுப்பியதோடு, மொத்த வினாத்தாள்களையும் பெற ரூ.10 ஆயிரம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இப்போது சமூகவலைதளங்களில் வினாத்தாள்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மதுரை ஆட்சியர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அவற்றில், கிராம உதவியாளர் தேர்வுக்கான வினாத் தாள்கள் மாற்றப்பட்டு காலை நடைபெறும் தேர்வில் புதியதாக தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் வினாத்தாள்களை கசியவிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |