Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிராமத்திற்குள் வந்த புள்ளிமான்…. கடித்து குதறிய நாய்கள்…. புதுகோட்டையில் சோகம்…!!

நாய் கடித்து புள்ளிமான் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செங்காணம் கிராமத்திற்குள் புள்ளிமான் ஒன்று இரை தேடி வந்துள்ளது. இந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி கடித்துக் குதறியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று நாய்களை விரட்டி விட்டு புள்ளிமானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. அதன் பிறகு புள்ளிமான் உடலை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து காட்டுபகுதியில் புதைத்துள்ளனர்.

Categories

Tech |