இந்தியாவில் ஒரே நாடு ஒரே நுழைவு தேர்வு என்ற அடிப்படையில் க்யூட் நுழைவு தேர்வுடன் நீட் மற்றும் ஜே இ இ நுழைவு தேர்வுகளை இணைக்க பல்கலைக்கழகம் மானிய குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுகளை பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மற்றும் இளநிலை படிப்பில் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
அதாவது கணிதம், இயற்பியல்,வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய நான்கு பாடங்களை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் மூன்று விதமான நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ள நிலையில் இவற்றை தவிர்க்க ஒரு முறை தேர்வு எழுதி வெவ்வேறு துறைகளுக்கு தகுதி பெற முடியும். இது தொடர்பாக உயர்கல்வித்துறையுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.