Categories
உலக செய்திகள்

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நாய்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் சிஹுவாஹுவா வகையை சேர்ந்த நாய் ஒன்று 21 வயது 66 நாட்களை கடந்து அதிக நாட்கள் உயிர்வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. மேலும் இந்த நாய் உலகின் மிகப் பழமையான நாய் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நாய் அந்நாட்டின் புளோரிடாவிலுள்ள க்ரீனாக்ரேஸின் கிசெலா ஷோர் என்பவருக்கு சொந்தமானது ஆகும். அவர் அந்த நாயை ஷோர் இனிமையான, மென்மையான மற்றும் அன்பான செல்லப்பிராணி என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் கின்னஸ் அமைப்பு பதிவிட்டதை பகிர்ந்த அவர், தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சிஹுவாஹுவா சராசரி ஆயுட்காலம் 12-18 ஆண்டுகள் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தன் செல்லப்பிராணி 20 வயதை கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதை தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகிறார். இவ்வாறு கின்னஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம்பிடித்த செல்லப்பிராணியின் வீடியோவானது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட நிலையில், தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு 17,000 க்கும் மேற்பட்டோர் லைக்குகளை கொடுத்துள்னர்.

Categories

Tech |