Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கிண்டல் செய்ததால் கொன்றேன்” தி.மு.க தொண்டருக்கு நடந்த கொடூரம்…. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தி.மு.க தொண்டரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலை பேரூராட்சியில் 10-வது வார்டில் தி.மு.க-வை சேர்ந்த பெண் வேட்பாளரான எமிபோல் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நவுஷாத் மனைவி ஷிம்ஜித் என்பவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் ஷிம்ஜித் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் திமுக தொண்டரான சமீர் என்பவர் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து ஷிம்ஜித் தனது கணவரான நவுஷாத்திடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த நவுஷாத் சமீரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதனை தடுக்க வந்த அஸ்கர் என்பவரையும் நவுஷாத் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சமீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமீரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் படுகாயமடைந்த அஸ்கரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த நவுஷாத்தை கைது செய்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கிண்டல் செய்ததால் சமீரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பிறகு காவல்துறையினர் நவுஷாத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |