Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிணற்றில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா கணபதி நகரில் இருக்கும் கிணற்றில் வாலிபரின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் வாலாஜாபேட்டை கச்சாலன் தெருவை சேர்ந்த பிரதீப் குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் கிணற்றுக்கு அருகே சென்ற போது தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |