Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. போலீஸாரின் அதிரடி நடவடிக்கை…!!

மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  கச்சிராப்பள்ளி காவல்துறையினர் கல்ராயன்மலை வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் 4 பெரிய டிரம்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் போட்டு  வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து  காவல்துறையினர் சாராய ஊறலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அவிழ்த்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |