முயலை வேட்டையாட முயன்ற 46 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி பகுதியில் ஒரு கும்பல் முயல் பிடிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர் குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 46 பேர் முயலை பிடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து பழனியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களிடம் நடத்தி விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஆண்டுதோறும் ஆடி 18 தினத்தை முன்னிட்டு முயல் வேட்டையில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் முயலை வேட்டையாட முயன்ற 46 பேருக்கும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 முயல்கள், 26 நாய்களை ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்