Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை..!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோரையாறு பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக வாகனங்களில் மணல் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேக்குடி ஆலம்பட்டி சாலையில் சென்ற 3 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்த போது மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் நடத்திய குற்றத்திற்காக சண்முகம், சரவணன், சந்திரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மாட்டு வண்டிகளையும், மணலையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |