Categories
தேசிய செய்திகள்

கிடுகிடுவென உயரப் போகும் உரம் விலை…. விவசாயிகளுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

ரஷ்யா, உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள நிலையில்  இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனில் ஏற்பட்டுள்ள கடுமையான சேதத்தை தொடர்ந்து அந்த நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என்ற காரணத்தினால் ஏற்றுமதி வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளன. இந்நிலையில் இந்திய விவசாயத்திற்குத் தேவையான உரங்களை மூலப்பொருள் பொட்டாஷ்  பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் இது தான் அதிகமாக வாங்கி வருகிறது.

ஏற்கனவே உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவின் பொட்டாஷ் இறக்குமதியை  12% செய்துள்ளது. முன்னதாக ரஷ்ய  துறைமுகங்களின் வாயிலாக பொட்டாஷ்  இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய முடிந்தது. இந்நிலையில் ரஷ்யா மீது ஏற்பட்டுள்ள பொருளாதார தடையால்  பெரும் சவால்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பிரச்சினையில் கனடாவில் பொட்டாஷ்  அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தாலும் தற்போதைய சூழலில் உற்பத்தியை கனடா அரசும் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பொட்டாஷ்  சப்ளை தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக இறக்குமதி செலவு மெட்ரிக் டன்னுக்கு 500 முதல் 600 டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உரத்தின் விலை அதிகரித்தால் அதை கட்டுப்படுத்த மத்திய அரசு மானியத்தை வழங்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பட்ஜெட்டில் உரத்திற்கான ஒதுக்கப்பட்ட மாநில அளவில் விட அதிகமாக ஒதுக்க வேண்டிய நிர்பந்தத்தில் அரசு தள்ளப்படும்.

Categories

Tech |